Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பரமத்தி சுற்றுவட்டாரத்தில் கனமழை: சாலையோர வியாபாரிகள் பாதிப்பு

நவம்பர் 11, 2023 09:38

பரமத்திவேலூர்: பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரத்தில்  தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. பரமத்தி, அர்த்தநாரிபாளையம், கூடச்சேரி, நடந்தை, பில்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிதிருநாளுக்கு ஒருநாளே இருக்கும் நிலையில் கனமழை காரணமாக சாலையோர வியாபாரிகள்,  சிறு வியாபாரிகள் மற்றும் பட்டாசுக்கடை உரிமையாளர்களுக்கு பெருமளவில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்